ஹிஜாப் பிரச்சனைக்கு பதிலடி கொடுத்த ‘பாரதி கண்ணம்மா’ பரினா – ரசிகர்கள் ஷாக்!
சில வாரங்களாக சமூகவலைத்தளத்தில் தினம் பேசப்பட்டு வரும் ஹிஜாப் பிரச்சனை பற்றி பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா விடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பதில் அளித்துள்ளார்.
ஹிஜாப் பிரச்சனை
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் முதன்மை கேரக்டரில் அருண், ரோஷினி நடித்து வந்தனர், மேலும் நடிகை ரோஷினி வெள்ளித்திரையில் கமிட் ஆகி உள்ளதால் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் தற்போது ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மா கேரக்டரில் வினுஷா நடித்து வருகிறார். மேலும் வில்லி வெண்பா ரோலில் நடித்து வருகிறார் ஃபரீனா ஆசாத்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணையும் புதிய பிரபலம் – இனி கதை வேற ட்ராக் தான்!
சீரியல் பார்க்கும் எல்லோரும் அவரை கண்டிப்பாக திட்டி தீர்த்து இருப்பார்கள். அந்த அளவுக்கு வில்லத்தனமான ரோல் அது. இருப்பினும் ஃபரினா தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட சீரியலை விட்டு விலகாமல் நடித்து வந்தார். மேலும் அவர் பிரசவத்திற்காக ஒரு சின்ன பிரேக் எடுத்து கொண்டார். அப்போது பாரதி கண்ணம்மா கதையில் அவர் சிறைக்கு செல்வது போல் காட்டப்பட்டு இருந்தது .இந்நிலையில் தற்போது ஃபரினா விற்கு பிரசவம் முடிந்து சில நாட்களிலேயே அவர் சீரியலில் நடிக்க வந்துள்ளார். மேலும் அவர் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோலாகலமாக நடந்த கடைதிறப்பு விழா!
இந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் கேள்வி & பதில் சேஷன் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர் “அக்கா ஹிஜாப் பிரச்சனைக்கு ஏதாச்சும் தீர்வு சொல்லுங்க” என்று கேள்வி கேட்டார். சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருவது ஹிஜாப் பிரச்சனை தான். மேலும் ரசிகர் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக நடிகை ஃபரீனா ஆசாத், “ஹிஜாப் போட்டு கொள்வதோ அல்லது பொட்டு வைத்து கொள்வதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்கள் மனைவியை இந்த வேலை செய், அந்த வேலை செய் என்று ஆர்டர் போட உங்களால் அனுமதிக்க முடியாது இல்லையா” என்று அதிரடியாக கூறி இருக்கிறார்.