விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி? வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவியில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தேஜஸ்வினி, தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய அறிமுகமாக களமிறங்க இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மக்களின் மனம் கவர்ந்த முக்கியமான சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையை அழகாக பிரதிபலிப்பதால் இதற்கு ஆடியன்ஸ் அதிகம். தற்சமயம் இந்த சீரியலின் கதைக்களம் புதிய கடைக்கு வரும் பிரச்சனைகள், அதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எதிர்கொள்ளும் விதம் குறித்த எபிசோடுகளுடன் இதுவரை வெளியானது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் எடுத்த செல்பி – வைரல் பதிவு!
அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை ஒரு வழியாக போராடி மீட்டுள்ள அண்ணன், தம்பிகள் அனைவரும் கடையின் திறப்பு விழாவுக்காக ஆயத்தமாகி வருகின்றனர். இது தொடர்பான எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புது வரவாக பிரபல சீரியல் நடிகை ஒருவர் இணைய இருப்பதாக ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
இரு சக்கர வாகனத்தில் 4 வயது குழந்தைக்கும் இனி ‘தலைக்கவசம்’ கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு!
அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இன்னும் 2 நாட்களில் ஒரு புது அறிமுகம் இருப்பதாகவும், விஜய் டிவியின் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் நடித்துள்ள நடிகை தேஜஸ்வினி ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாகவும், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 3 மணிநேர சிறப்பு எபிசோடாக வெளியாக இருப்பதாகவும் அந்த ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும் அது தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.