‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய அஞ்சலியாக களமிறங்கும் நடிகை அருள்ஜோதி – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய அஞ்சலியாக களமிறங்கும் நடிகை அருள்ஜோதி - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய அஞ்சலியாக களமிறங்கும் நடிகை அருள்ஜோதி - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய அஞ்சலியாக களமிறங்கும் நடிகை அருள்ஜோதி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து வந்த நடிகை கண்மணி சீரியலை விட்டு விலகிய பிற்பாடு அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை அருள்ஜோதி வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற லீட் ரோலில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் இருந்து விலகினார். இவரது விலகல் சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்டிருந்த நிலையில், புதிய கண்ணம்மாவாக அறிமுகமான நடிகை வினுஷா சிறப்பாக நடித்து மக்களிடம் இருந்து கிளாப்களை பெற்று வருகிறார்.

லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

அந்த வகையில் தற்போது புதிய கண்ணம்மாவாக நடிகை வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள துவங்கி இருக்கும் நிலையில், மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது இந்த சீரியலில், கடந்த 4 ஆண்டுகளாக அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கண்மணி தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இத்தொடரின் ஆரம்பத்தில் கண்ணம்மாவுக்கு தங்கையாக, அகிலனின் மனைவியாக நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த நடிகை கண்மணி காலப்போக்கில் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வந்தார்.

இதற்கிடையில் ஜீ தமிழ் சேனலில் ‘அமுதாவும் …..ம்?’ என்று புதிதாக துவங்கியுள்ள சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள கண்மணி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இந்த விஷயத்தை சமூக வலைதளங்கள் மூலமாக உறுதி செய்த நடிகை கண்மணிக்கு, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்மணிக்கு பதிலாக அஞ்சலியாக அடுத்து யார் நடிக்க போகிறார் என்றவொரு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பட்டு வந்தது.

மருந்து வாங்க பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, மனம் வருந்தும் படி பேசிய கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜீ தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியலில் ரம்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை அருள்ஜோதி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியாக தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தற்போது சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் ஷேர் செய்திருக்கும் நடிகை அருள்ஜோதி, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி கூறி விட்டு, இந்த சீரியலிலும் தனக்கு ஆதரவு கொடுக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!