மீண்டும் தாயாகும் நடிகை ஆலியா மானசா? அவரே வெளியிட்ட பதிவு!
ஆலியா மானசாவிற்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சமயத்தில் ஒரு வீடியோவை ஆலியா பதிவிட ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து மீண்டும் ஆலியா தாயாக போகிறாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆலியா மானசா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ஆலியா. இந்த சீரியலுக்கு பிறகு ஆலியா ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர், பிரசவத்தின் காரணமாக ஆலியா சீரியலில் இருந்து விலகினார். ஆரம்பத்தில் குழந்தை பிறந்து சில நாட்களிலேயே சீரியலில் இணைந்து கொள்வேன் என கூறியிருந்தார். பின்னர், குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
மீண்டும் அடுத்த சீரியலில் ஆலியா எப்போது நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், தற்போது ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் இருவரையுமே தனியாக தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அடுத்த சீரியலை பற்றி யோசிக்கவே ஆலியாவிற்கு நேரம் இருப்பதில்லை. இந்நிலையில், ஐலா பாப்பாவும் மிகவும் சேட்டை செய்து கொண்டிருந்ததால் ஐலா பாப்பாவை ஆலியா பள்ளிக்கு அனுப்பிவிட்டார். இதுமட்டுமல்லாமல் ஐலா பாப்பாவிற்கு பள்ளிக்கு சென்று வர சைக்கிள் கூட வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
குடும்பத்தில் அனைவர் முன்னிலையிலும் உண்மையை சொன்ன “பாக்கியா” – அதிரடியாக வெளியான சீரியல் ப்ரோமோ!
மேலும், ஆலியா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கூட சமூக வலை பக்கங்களில் நேரத்தை ஒதுக்கி வருகிறார். தற்போது ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ஆலியா புதிதாக அம்மாவாக போகும் தாய்மார்களுக்காக ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆலியா மீண்டும் அம்மாவாக போகிறாரா என சமூக வலை பக்கங்களில் பதிவினை வெளியிட்டும், கலந்துரையாடி கொண்டும் இருக்கின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.