ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் இருந்து நான் விலகுகிறேனா? நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்!
ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஜய், சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளுக்கு விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷால்:
தமிழ் சினிமா நடிகர்களுக்கு சமமாக சீரியல் நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் பல வெற்றி சீரியல்கள் TRPயில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் சீரியல்களில் பல திருப்பங்களையும், ஓடாத சீரியல்களை நிறுத்திவிட்டு புதிதாக பல சீரியல்கள் தொடங்க இருப்பதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடிகர் விஷ்ணு விஜய் மற்றும் நடிகை ரட்சிதா நடிக்க இருக்கின்றனர்.
விஜய் டிவி “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் – ரசிகர்கள் ஷாக்!
விஷ்ணு இதற்கு முன்னதாக ஜீ தமிழில் “சத்யா” சீரியலில் நடித்து வருகிறார். இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு வெற்றிநடை போடுகிறது. தற்போது புதிய சீரியலில் விஷ்ணு கமிட்டாகி இருப்பதால் அவர் சத்யா சீரியலில் இருந்து விலகுகிறாரா என சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வைரலாகி வருகிறது. இது குறித்து விஷ்ணு விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் நான் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பது உண்மை தான் ஆனால் அதனால் இந்த சீரியலை விட்டு நான் விலகவில்லை.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனமாக இனி “பாக்கியலட்சுமி” நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
இன்னும் நிறைய எபிசோடுகள் இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் சத்யா சீரியலில் அமுல் பேபி என கூப்பிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது. மேலும் அவர் இரண்டு சீரியல்களிலும் ஒன்றாக நடிக்க போவதாகவும், என்னால் இரண்டு சீரியல்களிலும் நடிக்க முடியும் என விஷ்ணு விஷால் தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறார். இந்த இரண்டு சீரியலுக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.