காரில் வந்து வாக்கினை பதிவு செய்த நடிகர் விஜய், களத்தில் மக்கள் இயக்கம் – ஓட்டு யாருக்கு?
இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் தனது வாக்கினை அளிக்க சென்றுள்ள நிலையில், சிறிது நேரம் வாக்களிக்காமல் அப்படியே நின்றுள்ளார். மேலும், அவரது ஓட்டு யாருக்கு என்பது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய்யின் ஓட்டு:
அரசியல் தலைவர்களின் ஓட்டு எந்த அளவிற்கு முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, தற்போதைய கால கட்டத்தில் நடிகர்களின் வாக்குகள் அதை விட முக்கியமாக கருதப்படுகிறது. தங்களது விருப்பமான நடிகர் எந்த கட்சியை ஆதரிக்கிறாரோ, அதையே தாங்களும் ஆதரவளிக்க ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில், நடிகர் விஜய் கடந்த முறை வாக்களிக்க செல்வது மிகப்பெரிய அளவில் வைரலாகியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவரை பின் தொடர்ந்து கூட்டமாக ரசிகர்கள் சென்றனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய விதிமுறை – NOTA & விவி பேட் முறை நீக்கம்!
அதனால் இந்த முறை அவர் பயன்படுத்தப்போகும் வாகனம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜய்யின் மக்கள் தொடர்பாளர், விஜய் காலை 7 மணிக்கு வாக்களிக்க கிளம்புவார் என்று முன்னதாக தெரிவித்திருந்தார். இதனால் காலை 5 மணி முதல் ரசிகர்கள் அவரது வீட்டின் வாசல் முன்பு குவிய தொடங்கினார்கள். காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தனது சிவப்பு நிற காரில் விஜய் காலை 7:05 மணிக்கு நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பள்ளியில் 192ஆவது வார்டில் வாக்களிக்க சென்றார்.
ரசிகர்கள் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகின்றது. இந்த அமைப்பிற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பின்னர், விஜய் வாக்களிக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது செய்தி ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்கள் அவரை நெருங்கி கூட்டமாக நின்றனர். இதனால் விஜய் சிறிது நேரம் வாக்களிக்காமல் அங்கு நின்றார். அவர்களை சிறிது தூரம் நகர சொல்லி விட்டு அதன் பிறகு தான் வாக்களித்தார்.