‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் இணையும் விஜய் – வெளியான தகவல்!
தமிழ் திரை உலகில் டாப் நடிகராக இருக்கும் விஜய் தனது அடுத்த படத்தில், கடந்த வருடம் வெளியாகி ஹிட் அடித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட இயக்குனருடன் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
நடிகர் விஜய்:
தளபதி விஜய் நடிக்கும் 65 வது திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக ஜூன் 22 அன்று விஜய் பிறந்தநாளுக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப்பட்டது. இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் குழந்தைகளுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – இணையத்தில் வைரல்!
கடந்த சில வருடங்களாக விஜய், ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஒரு படத்தில் நடிக்கும் போது, அடுத்த படத்துக்கான கதைகளை கேட்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவின. இவர் கார்த்தியும், நாகர்ஜூனாவும் இணைந்து நடித்த ‘தோழா’ படத்தை இயக்கியவர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த வாரம் இயக்குநர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடகர் கிரிஷ், நடிகர் விஜய்யுடன் வம்சி இணைந்து பணியாற்ற உள்ளதை நினைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் அந்த பதிவை சில நேரத்திற்கு பின்னர் எடுத்து விட்டார். விஜய் தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக தனது பதிவை நீக்கியிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங் பெரியசாமி நடிகர் விஜயிடம் கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. அது விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் அதனால் அவர் இயக்க உள்ள படத்தில் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ரசிகர்களும் இந்த செய்தி அறிந்து மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.