ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்திய நடிகர் விஜய் – தமிழக அரசு தரப்பு!
நடிகர் விஜய் மீது ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்த சர்ச்சை நிலவியது. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தியதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ்:
தமிழகத்தில் கடந்த 2012 ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த புதிய காரை அவர் பதிவு செய்ய முயற்சித்த போது தமிழகத்திற்கு வந்ததற்கான நுழைவு வரியை செலுத்த வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஜய் நான் ஏற்கனவே நுழைவு வரி செலுத்தி விட்டதாக தெரிவித்தார். இதை வட்டார போக்குவரத்து துறை மறுத்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை – பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி படத்தின் ஹீரோக்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்ற கருத்தை முன் வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அந்த நீதிபதி நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்தார். அதை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் கொரோனா சிறப்பு விடுமுறை – மாநில அரசு அனுமதி!
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தியதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தமிழக அரசு விளக்கத்தை ஏற்று விஜய் வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.