‘பிக் பாஸ்’ சென்ற நடிகர் சஞ்சீவுக்காக தளபதி விஜய் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் சஞ்சீவ் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நிலையில், அவரது நண்பர் விஜய் வாழ்த்து தெரிவித்ததாக சஞ்சீவ் இன் மனைவி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிக் பாஸ்:
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் நிகழ்ச்சியின் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஆக பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அனைத்து சீசனிலும் தவறாமல் இடம்பெறும் இந்த டாஸ்க் எப்போது வரும் என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது வரை அமீர் தவிர மற்ற அனைவருக்கும் வீட்டில் இருந்து சொந்தங்கள் வந்தனர்.
Vijay TV Bigg Boss 5 Promo | நிரூப்பிற்கு பின் விளைவுகள் கடுமையாக இருக்கும், எச்சரித்த கமல்!
மிகவும் உணர்ச்சி பெருக்கோடு அமைந்த இந்த டாஸ்க் பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. போட்டியின் 50வது நாளை ஒட்டி வைல்டு கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இருவரும் லேட் ஆக வந்தாலும், நன்றாக விளையாடுவதாக பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடிகர் சஞ்சீவ் ன் குடும்பத்தினர் மனைவி, மகள் மற்றும் மகன் மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்களை பார்த்து சஞ்சீவ் கதறி அழுது விட்டார். சஞ்சீவ் போட்டியாளராக வீட்டிற்குள் வந்த போதே அனைவரும் நடிகர் விஜய் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்று அவரிடம் கேட்டனர்.
ஜீ தமிழ் சீரியல் நடிகர் நந்தா & சாந்தினி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த வீடியோ – குவியும் லைக்குகள்!
அப்போதே, அதற்கு ஆம் என்பது போல் சஞ்சீவ் தலையசைத்தார். நேற்று சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி அனைத்து நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். அப்போது நடிகர் விஜய்யின் பெயரையும் கூறினார். அதை உறுதி படுத்த சஞ்சீவ் விஜய் கூடவா என்று கேட்டதற்கு ஆம் என்று கூறினார். மேலும், சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அடுத்த நாளே ப்ரீத்திக்கு, “அவன் நல்லா விளையாடுவான், பயப்படாதம்மா” என்று மெசேஜ் செய்ததாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.