சினிமாவில் மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல் வடிவேலு – முடிவுக்கு வந்த பிரச்சனை!
தமிழ் சினிமா உலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு, இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சில ஆண்டுகளாக நடிப்பை விட்டு விலகி இருந்தார். தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு புதிய படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவின் நகைச்சுவையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் வைகைப்புயல் வடிவேலு சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவர் ஏற்று நடித்துள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் மிகையாகாது. நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமான இவர் ஒரு பாடகரும் கூட. தமிழ் சினிமாக்களில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்த வடிவேலு இம்சை அரசன் 2 ஆம் புலிகேசி படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறினார்.
சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!!
இந்த திரைப்படம் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியாகி பல வெற்றிகளை பெற்றது. இதை தொடர்ந்து ‘இம்சை அரசன் 2 ஆம் புலிகேசி’ படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் வடிவேலு. ஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலே, வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதனால் அந்த திரைப்படத்தில் இருந்து வடிவேலு விலகினார். இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு எடுத்து சென்றார் ஷங்கர்.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்கு பலரும் தயங்கினார்கள். அதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு ‘சிவலிங்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஷங்கர் – வடிவேலு பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிர்வாகம், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த சிக்கல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து லைகா ப்ரொடெக்ஷன் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.