தமிழக அரசிடம் ரூ.5 லட்சம் கொரோனா நிதி – நடிகர் வடிவேலு வழங்கல்!!

0
தமிழக அரசிடம் ரூ.5 லட்சம் கொரோனா நிதி - நடிகர் வடிவேலு வழங்கல்!!
தமிழக அரசிடம் ரூ.5 லட்சம் கொரோனா நிதி - நடிகர் வடிவேலு வழங்கல்!!
தமிழக அரசிடம் ரூ.5 லட்சம் கொரோனா நிதி – நடிகர் வடிவேலு வழங்கல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலர் அரசிடம் நிதி வழங்கி வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கியுள்ளார்.

கொரோனா நிதி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசிற்கு இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் கொரோனா இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மக்களிடம் காணொளி மூலமாக அறிவிப்பு வெளியிட்டார்.

இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து – WHO எச்சரிக்கை !!

இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு செலவழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த வரிசையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் வடிவேலு முதல்வரை சந்தித்து ரூ.5 லட்சம் தொகையை கொரோனா நிதியாக வழங்கி உள்ளார். அப்போது பேசிய அவர், உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!