“பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாதுகாப்பே இல்லை” – நடிகர் தாடி பாலாஜி ஓபன் டாக்!
விஜய் டிவி நட்சத்திரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தாடி பாலாஜி. அவர் மனைவியுடன் பல சச்சரவுகள் உள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பின் பாதுகாப்பே இல்லை என பாலாஜி மனம் உருகி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
நடிகர் தாடி பாலாஜி:
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக பிரபலமாகி தற்போது விஜய் டிவி நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தாடி பாலாஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரும் மகேஷ் இணைந்து செய்யும் ஹுமர் எல்லாம் அளவே இல்லாமல் இருக்கும். மேலும் இவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் அவருடைய மனைவியும் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்லும் போது இருவரும் சுமூகமாக சேர்ந்து விட்டது போல காட்டப்பட்டது.
அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – ரசிகர்கள் வாழ்த்து!
கமல் சார் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அதன் பின் கூட இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதுகுறித்து பல செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து பாலாஜி பேசி இருக்கிறார். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அதாவது இன்ஸ்டாகிராமில் நித்யா தனது மகளுடன் பல வீடியோக்களை பதிவிடுவார். அதனால் போஷிகாவின் படிப்பு பாதிக்கப்படுவதாக பாலாஜி புகார் அளித்து இருக்கிறார்.
கர்ப்பமான முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
இது பற்றி பாலாஜி கூறுகையில், பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது போஷிகா 6 தேர்வுகளில் 3 தேர்வுகள் எழுதவில்லை என சொன்னதாக சொல்கிறார். நித்யா சரியாக படிக்கவிடாமல் அவரை சமூக வலைத்தளங்களுக்குள் புகுத்தி வாழ்க்கையை கெடுப்பதாக சொல்லி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிகமாக பணம் கேட்பதாகவும், பாதுகாப்பே இல்லாமல் இருப்பதாக பாலாஜி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.