மகனின் பெயரை முதன்முதலாக வெளியிட்ட சிவகார்த்திகேயன் – குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்!
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளி வந்த நிலையில், தற்போது குழந்தையின் பெயரை அவர் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களின் வாழ்த்து:
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன், தொகுப்பாளராக இருக்கும் போதே தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். பின்னர், தமிழ் சினிமாவில், துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், கதாநாயகன் அந்தஸ்தையும் பெற்றார். இவரின் நகைச்சுவை அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே, தனது கடின உழைப்பினாலும், நகைச்சுவையால் உயரத்திற்கு சென்று விட்டார்.
ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் – வழிமுறைகள் இதோ!
இவரது திரைப்படங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் காட்சிகள் இருக்கும். இதனால் தமிழக குழந்தைகளின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். தற்போது நடிகரில் இருந்து தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அறிமுக இயக்குனர்கள் பலருக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இவருக்கு திருமணமாகி முன்னதாக ஆராதனா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் கனா படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். அதில், பல வருடங்களுக்கு பின்னர் தனது அப்பாவின் விரலை பிடித்துள்ளதாக கூறி குழந்தையின் விரலை பிடித்திருக்கும் புகை படம் ஒன்றை பகிர்ந்தார். அந்த புகைப்படம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது. தற்போது, தனது மகனுக்கு குகன் தாஸ் என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்து குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.