ஒலிம்பிக் வீராங்கனை பவானிதேவிக்கு தங்க செயின் பரிசு – நடிகர் சசிகுமார் நேரில் வாழ்த்து!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த பவானிதேவி, ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்ட நிலையில் அவரை சந்தித்து நடிகர் சசிகுமார் அன்பளிப்பை வழங்கி உள்ளார்.
நடிகர் சசிகுமார்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்று சென்றனர். அவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தை சேர்ந்த சிலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.அதில் சென்னையை சேர்ந்த பவானிதேவி வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
சபரிமலை புரட்டாசி மாத பூஜை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் – பக்தர்கள் கவனத்திற்கு!
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் பவானி தேவி. இந்நிலையில் தமிழ் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பவானி தேவியை சந்தித்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவருக்கு அன்பளிப்பாக தங்க சங்கிலி ஒன்றை வாங்கியுள்ளார்.
OLA E – Scooter விற்பனை தள்ளிவைப்பு – செப்.15 முதல் தொடங்கும்! முழு விபரம் இதோ!
இது குறித்து சசிகுமார் நடித்து வரும் ‘உடன் பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தன்னுடைய டிவிட்டர் பக்க்கதில் ‘வென்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார். நல்ல மனம் வாழ்க’ என தெரிவித்திருக்கிறார்.