நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வரிடம் வழங்கல்!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்தித்து வழங்கினார்.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பல நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. அதற்கான கொரோனா நிவாரண நிதி திரட்டும் முயற்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை!!
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்படுள்ளது. இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டு வரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் முடிந்த நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன்படி ஏற்கனவே நடிகர் அஜித் ரூ.25 லட்சம், நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்கள். அதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி நன்கொடையாக ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளார். அதற்காக அவர் தலைமை செயலகம் சென்று முதல்வராக பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அதன் பின்னர் தனது நன்கொடையை வழங்கினார். ஏற்கனேவே ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், தனது கணவர் விசாகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.