திருப்பி அடிக்கணும்னு அவசியம் இல்லை – சீரியலில் வெளியேற்றப்பட்டதை அடுத்து நடிகர் ப்ரஜின் ஆவேச பேட்டி!
விஜய் டிவி “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் இருந்து ப்ரஜின் விலகிய நிலையில் அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது குறித்து ப்ரஜின் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
வைதேகி காத்திருந்தாள்:
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல பெயரில் இருக்கும் நிலையில் பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது தான் “வைதேகி காத்திருந்தாள்” சீரியல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ப்ரஜின் நடித்து வந்தார். அவருடைய ஜோடியாக நடிகை சரண்யா நடித்து வந்தார். சீரியல் தொடங்கி ஒரு மாதமே ஆன நிலையில் TRPயில் சரியான முன்னேற்றம் எதுவும் இல்லை.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்கு வந்த புதுவரவு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
மேலும் கடந்த வாரம் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகர் ப்ரஜின் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக ராஜ பார்வை சீரியல் முன்னா நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் இந்த சீரியல் வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகாது என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணமாக TRP இல்லை என்பதால் இயக்குனர் வருத்தத்துடன் இருந்தார்.
அதனால் சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரண்யா மற்றும் முன்னா இனி வேறு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்த சீரியலை விட்டு வெளியேறிய நடிகர் ப்ரஜின் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் கர்மா திருப்பி அனைவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுக்கும் நாம் நம்முடைய வேலையை மட்டும் செய்தால் போதும் என விளக்கம் அளித்து இருக்கிறார்.