வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் டி ராஜேந்தர் – அமெரிக்கா பயணம்! ரசிகர்கள் உருக்கம்!

0
வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் டி ராஜேந்தர் - அமெரிக்கா பயணம்! ரசிகர்கள் உருக்கம்!
வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் டி ராஜேந்தர் - அமெரிக்கா பயணம்! ரசிகர்கள் உருக்கம்!
வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் டி ராஜேந்தர் – அமெரிக்கா பயணம்! ரசிகர்கள் உருக்கம்!

வெள்ளித்திரையில் பஞ்சு அடிப்பதில் இவரை மிஞ்ச யாராலும் முடியாது என சொல்லும் அளவுக்கு அன்று முதல் இன்று வரை அதிக ரசிகர்களை குவித்திருக்கும் டி. ராஜேந்தர் அவர்கள் தற்போது மேல் சிகிச்சைக்காக வெளி நாடு சென்றிருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் சொன்ன விஷயம் ரசிகர்கள் மனதை நெகிழ வைத்துள்ளது.

நடிகர் டி.ராஜேந்தர் :

தமிழ் சினிமா துறையில் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணத்தால் கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த இருதயவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், நல்ல முறையில் மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது குறித்து இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் நான் இன்றைக்குத்தான் அமெரிக்கா போக இருக்கிறேன், ஆனால் எப்போதோ போய்விட்டார்! எங்கேயோ போய்விட்டார்! என்று கண்டபடி செய்தி பலர் எழுதுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் யாராயிருந்தாலும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்று விடக்கூடாதா? உடனே அவர்கள் மறைந்து விட்டார்கள் என்றெல்லாம் சில வதந்திகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதையெல்லாம் பார்த்து ரொம்பவே மனம் நொந்து போனேன்.

தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம்!

ஆனாலும் நான் தற்போது மன ரீதியாக நலமாக இருக்கிறேன், எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய ரசிகர்கள், சிம்புவின் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களுக்காக நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியல என நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், டி.ராஜேந்தரிடம் இருந்து பஞ்சு வராமல் இருந்தால் எப்படி! “நான் முகத்தில் தான் வச்சிருக்கேன் தாடி, என் வாழ்க்கையில் எதையும் மறைத்ததில்லை மூடி” சீக்கிரமே சிகிச்சை முடித்து விட்டு சென்னை திரும்பி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பேன். அதனால் என் அன்பு ரசிகர்களே இணையத்தில் பரவி வரும் எந்த வதந்திகளையும் நம்பாதீங்க! எனக் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார் டி.ராஜேந்தர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!