ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை? அமைச்சர் விளக்கம்!
ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் அனைத்து பொருட்களும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் சில மாற்றங்களும் கூடிய விரைவில் வர இருக்கிறது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான மலிவு விலை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அவ்வப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது மற்றும் ரேஷன் கார்டு முறையில் சில விதிமுறைகளும் புகுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சில முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, தமிழகத்தில் அதிகளவில் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ரேஷன் கடை அரிசி கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் எக்கச்சக்கமான பகுதிநேர ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரம் – அரசு புதிய அறிவிப்பு
இந்நிலையில், சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி மற்றும் ஏனைய நிதிகளின் மூலமாக பகுதிநேர ரேஷன் கடைகள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கிராமங்களில் 150 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு பகுதிநேர ரேஷன்கடை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.