தமிழகத்தில் கூடுதலாக 10,300 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இது தொடர்பாக கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள குறைகள் ஒவ்வொன்றாக பள்ளி கல்வித்துறையால் தீர்க்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது, தமிழகம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்கள் இடித்து புதுப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 10,031 பள்ளிகள் பழுதடைந்துள்ளதாகவும் இதனை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, கள்ளக்குறிச்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு கற்றலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆன்லைன் வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கல்லூரி ஒன்றில் நேரடி வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனநலம் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்த மருத்துவர்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள்
அத்துடன் மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்க கட்டாயமான முறையில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அத்துடன் விடுமுறை தினத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக நடப்பாண்டில் புதிதாக 10,300 ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.