மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை!!
அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம் உயர்வு:
நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. அந்த அனைத்து துறைகளிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு வழங்குவது வழக்கமான ஒன்று. அதாவது அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளான அகவிலைப்படி, வீட்டுவாடகை படி, கல்விப்படி, போக்குவரத்துப்படி என வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக சம்பள உயர்வு ஏதும் வழங்கவில்லை.
தமிழக பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய புதிய விதிமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
கடந்த ஆண்டு வழங்காத சம்பள உயர்வையும் சேர்ந்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்கப்பட்டது. பண்டிகை நேரத்தில் மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசை தொடர்ந்து ஒரு சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியது. இவ்வாறாக அகவிலைப்படி உயர்த்தி ஒரு மாத காலம் மட்டுமே முடிவடைந்த நிலையில் மீண்டும் ஒரு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமைக்ரான் பரவல் காரணமாக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு – அச்சத்தில் பொதுமக்கள்!!
அதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்த்தியத்தைப் போல், புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகைப்படி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சகம் இதற்கான முதல்கட்ட ஆலோசனையை முடித்துள்ள நிலையில் ரயில்வே ஊழியர் சங்கங்கள் வீட்டு வாடகைப்படி உயர்த்த வலியுறுத்தியுள்ளன. அதனால் ஊதிய உயர்வுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்புதல் கிடைத்தால் சுமார் 11.56 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இது மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.