தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை – ஜூன் 14இல் பேரணி!

0
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை - ஜூன் 14இல் பேரணி!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை - ஜூன் 14இல் பேரணி!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை – ஜூன் 14இல் பேரணி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் விகிதம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வருகிற 14ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்னும் சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே உள்ளது. அத்துடன் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டு வருகிற ஜூன் 13ம் தேதி அன்று 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டது.

Exams Daily Mobile App Download

இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிகாரி ஒருவர் பேசியதாவது, இதுவரை தமிழகத்தில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்றும் அத்துடன் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தினால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் அதிகப்படுத்தப்படும்.

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி Log in இல்லை, புதிய வசதி அறிமுகம்!

அத்துடன் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்பில் அனைவரும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்றும் அதன் பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வருகிற ஜூன் 14ம் தேதி அன்று பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவிறுத்தியுள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!