தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

1
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் பேட்டி!
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் பேட்டி!
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம்

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகை, கடை வாடகை மற்றும் சிறு குறு தொழில்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்ட பிறகு முடிவு செய்யப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது பொது மக்களிடம் ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் கருத்து கேட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்ட கருத்து கேட்பிலும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதாவது, தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர்.

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – புதிய வழிமுறைகள் வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் சட்டத்துறை உறுப்பினர் இல்லாத போது மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. அதனால் சட்டத்துறை உறுப்பினர் இடம் நிரப்பப்பட்ட பின்பு மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எப்படியோ இருமாதங்களுக்கு 500 அதற்கு மேல் பயன்படுத்தும நடுத்தர வர்க்கத்தை கசக்கி பிழிய அமைச்சர் தயாராக உள்ளது மட்டும் உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!