குழந்தைகளுக்கு தமிழில் பெயர் – அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு! வரவேற்கும் பெற்றோர்கள்!
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழில் பெயர்:
தமிழக அரசு தமிழ் மொழியை வளர்க்கும் பொருட்டு TNPSC போன்ற மாநில அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம். அப்போது தான் தேர்வர்கள் மற்ற பாடங்களின் அளித்துள்ள பதில்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனறித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் அனைத்து அரசு, தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது அக்.15-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக தற்போது மக்களுக்கு தமிழ் மீதுள்ள ஆர்வத்தை அதிகப்படுத்தவும் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்தவும் புதிய அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் சிறப்பு பரிசுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், மேலும் அக்குழந்தையின் முதலாமாண்டு கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்