மாநில அரசு கோப்புகளில் ஆங்கிலாமா? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! மீறினால் நடவடிக்கை!
இந்தியாவில் பல மாநிலங்கள் இன்றைக்கு தங்களது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதல்வர் உத்தரவு:
இந்தியாவில் பல வகையான மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மொழியானது மாநிலங்களை பொறுத்து வேறுபடுகிறது. இந்த நிலையில் பொதுவான மற்றும் இரண்டாம் மொழியாக மக்கள் ஆங்கிலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது நிறைய பேருக்கு ஏற்றதாக இல்லை. அதே நேரம் ஆங்கிலத்தில் எழுதுவதிலும்,பேசுவதிலும் சற்று சிக்கலை சந்திக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் மாநில அரசுகளும் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் உத்திரபிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவ புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் தாய் மொழியில் கல்வி பயின்ற மாணவர்கள் உயர்கல்வியை சிறப்பாக கற்க முடியும்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு கிடுக்கிப்பிடி போட்ட நீதிமன்றம் – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
அதே போல தமிழ்நாட்டில் அரசு போட்டித்தேர்வுகளில் தாய்மொழியான தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. TNPSC-ல் தமிழ் மொழி தகுதித்தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் அரசு கோப்புகளை மலையாள மொழியில் நிர்வகிக்க மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இனி மலையாளத்தில் மட்டும் கோப்புகளை நிர்வகிப்பதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.