ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை!!

0
ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு - இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை!!
ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு - இனி இதை செய்தால் கடும் ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு - இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை!!நடவடிக்கை!!
ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை!!

நாட்டில் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உணவு மற்றும் பொதுவினியோகத்துறை செயலாளர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரேஷன் கடை:

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பயன்படுத்தி மக்கள் மாதந்தோறும் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடருக்கு மத்தியில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசமாகவும், கூடுதலாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி உதவியது. மேலும் மத்திய அரசு வெளி மாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கார்டு தொடர்பான விதிகள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தகுதியுடையோர்கள் மட்டும் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் பயனர்களுக்கு முக்கிய அப்டேட் – இனி நீங்கள் ‘இதை’ செய்ய முடியாது!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகம் வந்த மத்திய உணவு மற்றும் பொதுவினியோகத்துறை செயலாளர் ரேஷன் கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அங்காடியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேஷன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்த கூடாது என்றும் கூறியுள்ளார். இதனை மீறி கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!