ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப்களின் மீது நடவடிக்கை – மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஆன்லைன் வாயிலாக கடன் வழங்கும் செயலிகளில் சந்தேகத்திற்குரிய ஆப்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரித்து உள்ளார்.
அமைச்சர் எச்சரிக்கை:
நாட்டில் ஆன்லைன் கடன் செயலிகளால் தற்கொலை உள்ளிட்ட விபரீதங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தற்போது இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அவர் பேசுகையில், பெரும்பாலான சந்தேகத்திற்குரிய கடன் வழங்கும் செயலிகள் ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்தே வெளியாகின்றன. இதன் விளைவாக நிறைய கடன் வாங்குபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், மேலும் இதன் மூலம் பணம் பறிக்கப்படுகிறது.
10 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
நாட்டிற்கு வெளியில் இருந்து வந்த மற்றும் சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் கடன் செயலிகள் மற்றும் அவற்றை அமைப்பதில் உதவிய இந்தியர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் கூறியுள்ளார். கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத சீன நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் கடன் செயலிகள் தொடர்பான அறிக்கைகள் குறித்து அமைச்சரிடம் விபரங்கள் கேட்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த விபரீத நிறுவனங்களை நிறுவுவதற்கு உதவிய இந்திய குடிமக்கள் மீது அனைத்து கோணங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளுக்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மத்திய வங்கி விரைவில் வெளியிடும் என்று கூறியிருந்தார். பெரும்பாலான டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் தானாக இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.