தமிழக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை? அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் மக்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என அச்சத்தில் இருக்கின்றனர்.
முழு ஊரடங்கு:
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000க்கு மேல் பதிவாகி வருகிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 400க்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனால் மக்கள் சற்று அச்சத்தில் இருக்கின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க உருமாறிய ஒமைக்ரான் தொற்றின் பிஏ 5 வகை வைரஸ் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பிற்கு தகுந்தபடி மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
எனவே, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பொதுமக்கள் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் முழு ஊரடங்கை எதிர் கொள்ள முடியாது என்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் தற்போதைக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.