TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 4 தேர்வு குறித்து வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அரசுப்பணிகளுக்கான அரசு பணியாளர் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது போன்ற அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் தேர்வுகளை நடத்துவது மிகவும் சிக்கலான காரியம் ஆகும். இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பதால் அரசு தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிக தேர்வர்கள் கலந்து கொள்ளும் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு அறிவிப்பு குறித்து பலரும் எதிர்பார்த்து வந்தனர். 10ம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்டு நடத்தப்படும் இந்த தேர்வில் மற்ற அனைத்து தேர்வுகளையும் விட அதிக தேர்வர்கள் கலந்து கொள்வார்கள்.
டிச.23ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு விளக்கம்!
புதிய அரசு விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில், 2022ம் ஆண்டு முக்கிய தேர்வுகளின் அறிவிப்புகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் தேர்வின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்வின் முறை குறித்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமே என்று பலரும் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
முன்னதாக குரூப் 4 தேர்வுகளில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி இருந்தது. அதில், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழி பாட பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அதேபோல், பொது அறிவு பகுதியில் 100 வினாக்கள் 150 வினாக்களுக்கு கேட்கப்படும். தற்போதைய மாற்றத்தின் படி ஆங்கில விருப்ப மொழி தேர்வு செய்யும் வழக்கம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டாயமாக 150 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழியில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். இந்த பகுதியில் மொத்தம் 40 வினாக்களுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே அவர்களின் பொது அறிவி பகுதி மதிப்பிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லை என்றால் அவர்களின் விடைத்தாள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.