தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் அரசு தெரிவித்துள்ள கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பள்ளி கல்விக்கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்வுகளும் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டு அடுத்த ஆண்டிற்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தவே அரசு அறிவுறுத்துகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் திருட்டு – சைபர் க்ரைம் எச்சரிக்கை!!
இதனால் பல தனியார் பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் வசூலிக்கவும்,
TN Job “FB Group” Join Now
அதில் முதல் தவணையாக 30 சதவீதம் மற்றும் 2ஆது தவணையாக 45 சதவீதமாக செலுத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த வழிமுறைகள் அனைத்தையும் அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.