சீரியல் படக்குழுவினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி! சின்னத்திரையில் சோகம்!
சேலம் மாவட்டத்தில் சுற்றுலா தளமான ஏற்காட்டில் சென்னையை சேர்ந்த சீரியல் படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
படக்குழுவினர் விபத்து:
தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் சீரியல்களில் மக்களின் தேவைகளை அறிந்து படக்குழுவினர் இரவு பகல் என உழைத்து வருகின்றனர். மேலும் கதைக்கு ஏற்றார் போல இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது. அங்கே இயற்கை எழில் பொங்கும் சூழலை படம் பிடிக்க பல்வேறு சினிமா படக்குழுவினர் வருவார்கள்.
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இந்நிலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது சினிமா ஷூட்டிங் நடைபெறும். அந்த வகையில் சென்னையை சேர்ந்த பிரபல சீரியல் குழு ஒன்று கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தங்கி படப்பிடிப்பை நடந்தி வந்துள்ளனர். இதில் நேற்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாய்ண்ட் என்ற பகுதியில் படப்பிடிப்பை முடித்த குழுவினர், அங்கிருந்து பெலாத்தூர் பகுதிக்கு வேனில் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்த வேனை ஈரோட்டை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டினார். மலை பகுதியாக இருந்த நிலையில் சாலையில் வளைவான பகுதியில் சென்ற போது எதிரே ஒரு லாரி வந்ததால் உடனடியாக ட்ரைவர் வேனை திருப்பி உள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அடி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்த பாண்டியன் (41), சஞ்சய் (33) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி அறிந்து சின்னத்திரை சோகத்தில் மூழ்கி உள்ளது. விபத்து நடந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.