போலி ஆவணங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனம் – இது தேவையா? இப்போ அனுபவிங்க!
வேலைவாய்ப்பு பெறுவதற்காக ஏமாற்று வேலைகள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு அதை செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி ஒன்றை சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்துள்ளது.
போலி சான்றிதழ்:
நாட்டில் மோசடியான காரியங்கள் மூலம் பல ஏமாற்று வேலைகள் நிகழ்ந்து வருவது குறித்து அவ்வப்போது பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையிலும், அது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில், தற்போது நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அக்சென்ச்சர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக வேலை நாடுநர்களிடம் தகுதிகள் பற்றி கேட்கப்பட்டிருக்கும். அவ்வாறு முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும்.
அஞ்சல் அலுவலக திட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டுமா? இந்த திட்டத்தை தேர்வு செய்து பயனடையுங்க!
Exams Daily Mobile App Download
இதனால் போலியான நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் அனுபவக் கடிதங்களைப் பயன்படுத்தியதற்காக ஆக்சென்ச்சர் நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் கிட்டத்தட்ட 1000 ஊழியர்களுக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னணி IT நிறுவனத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.