தமிழகத்தில் இன்று முதல் அரசு AC பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக இயக்கப்படாமல் இருந்த அரசு ஏசி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து துறை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்தது. இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா நோய் பரவும் விகிதத்தை குறைக்க போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டது. மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
TN MRB உணவு பாதுகாப்பு அதிகாரி – 119 காலிப்பணியிடங்கள், அக்.13 முதல் விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சில பகுதிகளில் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மாநிலம் முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்குவதற்கான அறிவிப்பு மற்றும் அதற்கான நெறிமுறைகளையும் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
Google Doodle இல் சிவாஜி கணேசன் – பிறந்தநாளில் கவுரவித்த கூகிள்! ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னை மாநகரத்தில் 48 பேருந்துகளும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல 340 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.