TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வாணைய தலைவர் முக்கிய தகவல்!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேர்வாணைய தலைவர் முக்கிய தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேர்வாணைய தலைவர் முக்கிய தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வாணைய தலைவர் முக்கிய தகவல்!

TNPSC ஆண்டுத்தோறும் மேற்கொண்டு வரும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து குரூப் 4 தேர்வு எழுத கடந்த 6 நாட்களில் 1.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய தகவல்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் கடந்த மாதம் 29ம் தேதி வெளியிட்டார். மேலும், 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தேர்வாணையம் குரூப் 4 பதவிகள் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் 81 விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மற்ற தேர்வுகளை விட குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகமான போட்டிகள் நிலவி வருகிறது.

ஏனென்றால் இந்த தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும். மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கு கடந்த 30ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வர்கள் போட்டி போட்டுக் கொண்டு 6 நாட்கள் மட்டும் (நேற்று மாலை 5.25 மணி நிலவரப்படி) குரூப் 4 தேர்வுக்கு 1,43,832 பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறியுள்ளார். மேலும் இத்தேர்வுக்கு சுமார் 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpscexams.in என்ற  தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!