தமிழகத்தில் காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு – அதிரடி நடவடிக்கை!

0
தமிழகத்தில் காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு - அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு - அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு – அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது. மேலும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஆர்டர்லி முறை:

தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆர்டலி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி இவ்வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அதன்படி, 19 ஆர்டலிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து டிஜிபி ஆர்டர்லி முறையை ஒழிக்க, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் (இன்று) டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கூறி இருந்தார். இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

கோபியிடம் பணத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற வைத்த பாக்கியா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

இந்த உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இந்த உத்தரவை சரியாக கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இன்று பாராட்டு தெரிவித்துள்ளது. ஆர்டர்லி முறை ஒழிப்பில் அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!