அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து – கவுன்சில் முக்கிய அறிவிப்பு!
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிசி, கோதுமை முதலான பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவுன்சில் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி ரத்து
சமையல் பொருட்களில் இருந்து அனைத்து உபயோக பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். அண்மையில் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதாவது, இந்த கூட்டத்தில் முக்கிய சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தியுள்ளதாகவும், இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் கடந்த ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ரேஷன் கடைக்காரர்கள் இனி ‘இதை’ செய்யக்கூடாது – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!
அதாவது, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களில் இருந்து பெரிய பெரிய ஹோட்டல் வாடகை வரைக்கும் அனைத்திற்குமான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படும் மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு, ரவை, சோளம், பருப்பு வகைகள் மற்றும் அனைத்து தானிய வகை பயிர்களுக்கும் 5% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது பாக்கெட்டில் அடைத்து வைத்து மற்றும் சில்லறை விலையில் விற்கப்படும் சோளம், கம்பு, அரிசி, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் முதலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. இதனை தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தபடி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டியின் கூடுதல் வரி விகிதத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.