பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இரவோடு இரவு வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ரியாலிட்டி ஷோவுக்கு பஞ்சமில்லாத விஜய் டிவியில் ஆரம்பமாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ முடிவுக்கு வரும் நிலையில் இந்த வாரம் மக்களிடையே பிரபலமான ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்ப போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ:
விஜய் டிவி தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மக்களை என்டேர்டைன் செய்வதற்க்காக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 60 முதல் 70 நாட்கள் வரை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் ஆரம்பமாகிய ஷோ தான் இது. இதில் கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் இதில் கலந்து கொண்டனர்.
விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
இவ்வாறு 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி பிக் பாஸ் ஷோக்கு கிடைத்த ரீச் அளவுக்கு இதற்கு ரீச் இல்லை என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் சுரேஷ் எலிமினேட் ஆனது அடுத்து சுஜா, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன், அனிதா,என அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினார்கள். இதில் உள்ள எல்லா போட்டியாளர்களும் விளையாட்டை உண்மையாக விளையாடாமல் ஒரு மாதிரி Safe Game தான் விளையாடினார்கள். ஆனாலும் இந்த ஷோவை சிலர் கமலுக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்புக்காக பார்த்து வந்தனர்.
விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் மூலம் ஜோடி சேரும் கார்த்தி & ஆல்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
இதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி இறுதிக்கட்ட நிகழ்ச்சி வரவுள்ள நிலையில் பாலாஜி தான் வெற்றியாளர் என்று பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வாரம் பாலாஜி, நிரூப், ஜுலி, தாமரை, ஸ்ருதி. ரம்யா, அபிராமி எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி இருந்தார்கள். இவர்களில் இதுவரை குறைவான வாக்குகளை பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து பிரபலமான அபிராமியே பெற்றிருக்கிறார். மேலும், இவர் இன்று இரவு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.