விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் & சினேகன் – ரசிகர்கள் ஷாக்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டு மூன்றாவது வார முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த வாரம் இரண்டு எவிக்சன் இருப்பதாக ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
விஜய் டிவியில் மக்கள் ஆதரவை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்டு மூன்றாவது வார முடிவுக்கு வந்துள்ளது. முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பின் இரண்டாவது வாரத்தில் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று சுஜா வெளியேறினார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல் – ஷாக்கான எழில்!
இந்நிலையில் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடந்துள்ளது. அதில் அபிநய், சினேகன், பாலாஜி முருகதாஸ் என பலர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மக்களின் குறைவான வாக்குகளின் படி அபிநய் இருக்கிறார். அதனால் அவர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிக்பாஸ் குழுவினர் பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்து இருக்கிறார். இன்றைய எபிசோட் குறித்த முதல் ப்ரோமோவில் இரண்டு பேர் இன்று எலிமினேட் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட புது கடை!
நடந்து முடிந்த ஐந்தாவது சீசனில் கடைசி இரண்டு வாரத்திற்கு முன்னதாக இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். அது போல இந்த நிகழ்ச்சியிலும் செய்ய வாய்ப்புள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 50 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் என்பதால் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த வாரம் அபிநய் மற்றும் சினேகன் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.