பிக்பாஸ் வீட்டில் ராஜு உடன் அடிக்கடி சண்டையிட்ட அபிநய் ? ரசிகர்களின் கேள்விக்கு பதில்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேறிய அபிநய், ராஜுவிடம் சண்டை போட்டீங்களா என்ற ரசிகரின் கேள்விக்கு இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் அபிநய்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவர் தான் அபிநய். அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது முதல் பிக்பாஸ் போட்டியாளர்களான அபிஷேக், ஜக்கி என பலரை சந்தித்து வருகிறார். மேலும் அந்த வீட்டிற்குள் நடந்த கசப்பான சம்பவங்களை நான் மறக்க நினைக்கிறன் என அவர் சொல்லி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவரை ரசிகர்கள் அவருக்கு கொடுத்த அன்பிற்கு நன்றி என சொல்கிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து பிரியங்காவை வெளியேற்ற சொன்ன நிரூப் – ரசிகர்கள் ஷாக்!
மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சிபி பற்றி கேட்கிறார். அவர் நல்ல பையன் சிறிது கோபப்படுவார் என சொல்லி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் பிக்பாஸை தான் மிஸ் செய்கிறேன் என சொல்லி இருக்கிறார். அடுத்து அக்ஷரா பற்றிய கேள்விக்கு அவங்க நல்ல ஸ்ட்ரோங் போட்டியாளர் என பதில் சொல்லியிருக்கிறார். தற்போது டாப் வரிசையில் இருக்கும் ராஜுவின் ரசிகர்கள் அவரிடம் கேள்வி ஒன்றை கேட்டு இருக்கின்றனர்.
அதில் எப்போ பார்த்தாலும் ராஜுவிடம் ஏன் சண்டை போடுறீங்க என கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை. போட்டி என்று வரும் போது பேச வேண்டி இருந்தது. ஆனால் மத்தபடி அவரிடம் நான் சண்டை போட்டதே இல்லை என சொல்கிறார். பாவ்னி பற்றி கேட்ட ஒரு ரசிகர்கள் வெளியே வந்த பின்னாடி பாவ்னி உடன் நல்ல நட்பை நீங்க தொடர வேண்டும் என சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த கேள்விக்கு மட்டும் அவர் பதில் சொல்லவில்லை. மேலும் பல கேள்விகளுக்கு அவர் தெளிவாக பதில் அளித்து இருக்கிறார்.