தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடல்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்ததுஉள்ளது. இதன் அடிப்படையில், பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய கோரிக்கைள் வலுப்பெற்று வருகிறது.

தற்காலிக ஆசிரியர் நியமனம்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருந்தன. மேலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தைக் கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது, கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(B.Ed) மாணவர்களையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி((M.Ed) மாணவர்களையும் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

அதாவது நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் கல்வியை சிதைக்க நினைப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மை என்று கடுமையாகக் கண்டித்ததோடு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்குத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவை கைவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பத்தாண்டிற்கும் மேலாகப் பணி நியமனத்திற்காக காத்திருப்பவர்களை உடனடியாக நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!