ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!
விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவனம் (AAVIN Villupuram) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Veterinary Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நாளை (26.05.2022) நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
AAVIN Villupuram வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் (AAVIN Villupuram) காலியாக உள்ள Veterinary Consultant பணிக்கு என்று மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Veterinary Consultant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.V.Sc & A.H. Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் Veterinary Council-லில் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினியில் பணி செய்யும் திறமை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- Veterinary Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Veterinary Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.43,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நாளை (26.05.2022) காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
AAVIN விண்ணப்பிக்கும் வழிமுறை:
விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நாளை (26.05.2022) நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.