ஆவினின் காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆவினில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆவினின் காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் மாதம் ரூ.2,50,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF) மற்றும் DCMPU ஆகிய இரண்டும் TCMPF லிமிடெட்டின் சிறப்புச் சட்டங்களின்படி, மேலாளர், துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் போன்ற 322 பணியிடங்களை முறையாக நிரப்புமாறு TNPSC செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்வு தேதி போன்ற விவரங்கள் TNPSC இணைய தளத்தில் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது