ஆவின் நிறுவனத்தில் 636 பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு – அமைச்சர் தகவல்!
ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக நடைபெற்ற 636 பணி நியமனங்கள் ரத்து செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் அந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் இனி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனம்:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஆவின் எனும் வணிக பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து மூன்று அறிக்கைகளை வெளியிட்டார். அதில் ஒன்று ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு. இதன் மூலம் ஆவின் பால் விற்பனை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்து 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அலகுத்தேர்வுகள் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள், ஆவின் நிறுவனத்தில் 636 பணியடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டு உள்ளதாகவும், அந்த நியமன ஆணைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளார். அந்த பணிகளுக்கு TNPSC மூலம் இனி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை அதிகரித்துள்ளது. பால் கொள்முதலை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
I want job