தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு டம்ளர் ஆவின் பால் – அரசு அறிவிப்பு!
அரசு பள்ளி மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு டம்ளர் ஆவின் பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு முக்கிய அறிவிப்பு:
பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல சிறப்பு நலத் திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதாவது, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள், இலவச நோட் புக் ஆகியவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவும் கொடுக்கப்பட்டு வருகிறது. பஞ்சத்தில் வாழும் அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் இத்தகைய சத்துணவு மற்றும் இலவச பொருட்கள் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பண இழப்பை தவிர்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மேலும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கில புலமையை அதிகரிக்கவும் தனியாக சிறப்பு பயிற்சி கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் தேவை என்கிற பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் ஒரு டம்ளர் ஆவின் பால் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் ஒரு டம்ளர் பால் குடித்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளும் பயன் பெறுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.