மே 8 மாலை உருவாகும் அசானி புயல் – 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிக வெப்பத்தினால் வெப்பம் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – வலுக்கும் கோரிக்கை!
மேலும் சேலம், நாமக்கல் காரைக்கால், கிருஷ்ணகிரி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு அசாணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன், புதுவை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் நாளை மாலை அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதை அடுத்து துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த புயல் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் இது மாலைக்குள் மேலும் வலுவடைந்து புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.