விமானத்துறையில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
விமான துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணிக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Airports Authority of India (AAI) |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய விமான நிலைய ஆணையம் காலிப்பணியிடங்கள்:
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வெளியிட்ட அறிவிப்பில் அகமதாபாத், நாக்பூர், சோழபூர் ஆகிய இடங்களில் காலியாக உள்ள Consultant பணிக்கு என 07 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
Consultant தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
ExamsDaily Mobile App Download
விண்ணப்பதாரர் ஓய்வு பெற்ற Dy. Collector, தாசில்தார் அல்லது அதற்கு சமமான பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்திய விமான நிலைய ஆணையம் வயது வரம்பு:
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Consultant ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
AAI தேர்வு முறை:
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Interview மற்றும் Merit Ranking மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
AAI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 24.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.