ரூ.75,000/- சம்பளத்தில் இந்திய விமான நிலைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!!
Consultant பணியிடங்களை நிரப்ப இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய விமான நிலைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் பாட்னாவில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் Consultant பதவிக்கு பணியாற்ற மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- E7/E6 நிலையிலிருந்து ஓய்வு பெற்ற குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு முதலில் 21.01.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான அவகாசம் தற்போது 31.01.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.