TNPSC தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்? தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமா என எழுப்பப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை
மத்திய அரசால் வழங்கப்பட்ட தனித்துவ அடையாள அட்டை ஆவணமான ஆதார் பல வகையான சேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் வங்கிகளில் புதிய கணக்கு துவங்குவது முதல் சிம் கார்டுகள் வாங்குவது வரை இவ்வகை ஆதார் அட்டைகள் அவசியமானதாகும். இந்த வரிசையில் அரசு நடத்தும் எந்தவொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!
இது தவிர தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் மற்றும் JEE போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களும் தேர்வு நடைபெறும் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்னதாக ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளுக்கும் ஆதார் அட்டைகள் கட்டாயமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல் – அதிர்ச்சி தகவல்!
அதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆதார் எண் கேட்பதற்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜானகி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, TNPSC தேர்வுகளுக்கு ஆதார் எண் கேட்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டுள்ளது.