மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம் – அமைச்சர் அறிவிப்பு!

0
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம் - அமைச்சர் அறிவிப்பு!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம் - அமைச்சர் அறிவிப்பு!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம் – அமைச்சர் அறிவிப்பு!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

மின் இணைப்பு:

தமிழகத்தில் இந்த ஆண்டு முதலே மின்சார துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்தது. அதே போல், இதுவரை 90% மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

LIC-ன் புதிய ஜீவன் சாந்தி திட்டம் – மாதம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஓய்வூதியம்.. விவரம் இதோ!

இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர். ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை இணைக்காதவர்கள் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இணைக்குமாறு தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!