தமிழக மக்களே.. மின் இணைப்பு – ஆதார் இன்னும் இணைக்கலயா? உங்களுக்கு 2 நாட்கள் தான் Time!
தமிழக அரசு மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வழங்கியுள்ள கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. தற்போது வரை 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இன்னும் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆதார் – மின் இணைப்பு:
தமிழ்நாட்டின் மின்சார வாரியம் மின் நுகர்வோர்கள், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதலில் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை வழங்கப்பட்டது.
இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கவலையில்லை – உணவு ஆணையத்தின் முக்கிய அறிவுறுத்தல்!
Follow our Instagram for more Latest Updates
பின்னர் ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழகத்தில் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவர்களும் ஆதாருடன் மின் இணைப்பை சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜனவரி 31 என்று முன் அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதால் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இப்பணியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.