PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ஆதார் எண் கட்டாயம்!
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் 12 வது தவணை செலுத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
PM Kisan திட்டம்
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டம் மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஒரு வருடத்திற்கு ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கி கொள்கின்றனர்.
தமிழக பள்ளிகளில் முறையாக ஆய்வு – பாதுகாப்பு ஆணைய தலைவர் எச்சரிக்கை!
இத்திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ நிலத்தை வைத்திருக்கலாம். ஆனால் பயனாளியின் குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தி வருகிறார் எனில் அவரால் இந்தத் திட்டத்தில் இணைய முடியாது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 11 வது தவணை வரை விடுவிக்கப்பட்டது. இந்த தவணை தொகை கடந்த மே மாதம் 31ம் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளது. இத்திட்ட பயனாளிகள் தங்களுக்கு கிடைத்துள்ள பணம் வரவுகளை pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த இணையதளத்தில் சென்று புதிய அறிவிப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். இதையடுத்து தற்போது 12வது தவணை தொகை வழங்குவது தொடர்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த உதவித்தொகையை பெற பயனாளிகள் அனைவரும் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 155261 / 011-24300606 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல்களை கேட்டறிந்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்